ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் கோலியை மிஸ் செய்த இந்திய அணி

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் கோலியை மிஸ் செய்த இந்திய அணி
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் கோலியை மிஸ் செய்த இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பங்கேற்கவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பரிலிருந்து இந்திய அணி பங்கேற்ற 54 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற கோலி, முதல்முறையாக இந்த டெஸ்டில் பங்கேற்கவில்லை. ராஞ்சி டெஸ்டில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது விராத் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தர்மசாலா டெஸ்டில் நூறு சதவீதம் உடற்தகுதி இருந்தால் மட்டுமே களமிறங்குவேன் என்று கோலி கூறியிருந்தார். உடற்தகுதியை முழுமையாக எட்டாத நிலையில், போட்டியிலிருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட, அஜிங்கியா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com