துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நடப்பு சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. டாஸை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அந்த அணியின் கேப்டன் கோலி 42 பந்துகளில் 51 ரங்களை சேர்த்திருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பரத் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மேக்ஸ்வெல் 33 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்தார். அவரது ஸ்விட்ச் ஹிட் ட்ரீட்மெண்டுக்கு மும்பை பவுலர்கள் பணிந்தனர். பும்ரா வீசிய 19-வது ஓவரில் மேக்ஸ்வெல் 56 ரன்களுக்கு அவுட்டானார். அதே ஓவரில் டிவில்லியர்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். டேனியல் கிறிஸ்டியன் மற்றும் ஷபாஸ் அகமது அடுத்தடுத்து களம் இறங்கினர். அதில் ஷபாஸ் ஒரு ரன் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் போல்ட் மூன்று ரன்களை மட்டுமே வித்துக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.
இருபது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது பெங்களூர் அணி. அதனால் மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 166 ரன்களை விரட்ட வேண்டியுள்ளது.