சென்னை அணி பந்துவீச்சை பொளந்து கட்டிய ராகுல்! 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

சென்னை அணி பந்துவீச்சை பொளந்து கட்டிய ராகுல்! 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
சென்னை அணி பந்துவீச்சை பொளந்து கட்டிய ராகுல்! 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்கள் 134 ரன்களை எடுத்திருந்தது. 

சுலப இலக்கை விரட்டியது பஞ்சாப். அந்த அணிக்காக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். குறைந்த ஓவரில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று தகுதிக்கான நான்காவது அணியாக தங்கள் அணி இருக்கும் என்ற நம்பிக்கையில் இருவரும் விளையாடினர்.

மயங்க், சர்பராஸ் கான், ஷாருக்கான், மார்க்ரம் என நான்கு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தாலும் பஞ்சாப் அணியை ஒற்றை ஆளாக முதுகில் சுமந்தது கே.எல்.ராகுலின் இன்னிங்ஸ். 

42 பந்துகளில் 98 ரன்களை விளாசி பஞ்சாப் அணியை 13 ஓவர்களில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப், பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இருப்பினும் அந்த அணி பிளே ஆப் செல்வது கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் விளையாடும் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே உள்ளன. 14 ஓவர்களில் 135 ரன்களை பஞ்சாப் எடுத்தால் ரன் ரேட் வித்தியாசத்தில் மும்பையை அந்த அணி முந்தும் என புள்ளி விவரங்கள் சொல்லி இருந்தன. தற்போது அதே போலவே பஞ்சாப் இலக்கை அடைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com