கே.எல்.ராகுல் சதம்; விராட் கோலி, ரிஷப் பன்ட் அரைசதம் - ரன் குவிப்பில் இந்திய அணி

கே.எல்.ராகுல் சதம்; விராட் கோலி, ரிஷப் பன்ட் அரைசதம் - ரன் குவிப்பில் இந்திய அணி

கே.எல்.ராகுல் சதம்; விராட் கோலி, ரிஷப் பன்ட் அரைசதம் - ரன் குவிப்பில் இந்திய அணி
Published on

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடக்கத்தில் இந்திய அணி நிதானமாக விளையாடினாலும் பின்னர் அதிரடியாக விளைடாடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. கே.எல்.ராகுல் சதம் அடிக்க, விராட் கோலியும், ரிஷப் பண்ட்டும் அரைசதம் அடித்தனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. 8.4 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் விரைவில் ஆட்டமிழந்த போதும், கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினர். இருவரும் 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். 

முதலில் கோலியும், அதற்கடுத்த சில பந்துகளில் ராகுலும் அரைசதம் விளாசினர். இது இந்த தொடரில் அவர்கள் அடிக்கும் இரண்டாவது அரை சதமாகும். கடந்த போட்டியில் இருவரும் அரை சதம் அடித்திருந்தனர். 

கோலி 66 ரன்களில் இருந்த போது ரீஸ் டோப்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கே.எல்.ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 28 பந்துகளிலேயே அரைசதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 108 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 43.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com