சையது முஷ்டாக் கோப்பை: ராகுல், மணிஷ் பாண்டே விளாசலில் தமிழகம் தோல்வி

சையது முஷ்டாக் கோப்பை: ராகுல், மணிஷ் பாண்டே விளாசலில் தமிழகம் தோல்வி
சையது முஷ்டாக் கோப்பை: ராகுல், மணிஷ் பாண்டே விளாசலில் தமிழகம் தோல்வி

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான சூப்பர் லீக் போட்டியில், கர்நாடக அணியிடம் தமிழக அணி தோல்வியைத் தழுவியது.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இப்போது சூப்பர் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில்  ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியுடன் நேற்று மோதியது.

முதலில் ஆடிய தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 43 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 39 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய கர்நாடக அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கே.எல்.ராகுல் 69 ரன்களும், கேப்டன் மணிஷ் பாண்டே 52 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com