8 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி, பரிதாப தோல்வி!

8 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி, பரிதாப தோல்வி!

8 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி, பரிதாப தோல்வி!
Published on

ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்தது. 

ஐபிஎல் தொடரிl, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் சாம் குரான் ஆகியோர் 15 (11) மற்றும் 20 (10) ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த மயங்க் அகவர்வாலும்  6 (9) ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சர்ஃபராஸ் கானும் டேவிட் மில்லரும் ரன்களை உயர்த்தினர். 39 (29) ரன்கள் எடுத்த நிலையில் கான் அவுட் ஆனார். பின்னர் மில்லரும் 43 (30) ரன்னில் பெவிலியன் திரும்ப, அவர்களுக்கு பின்னர் வந்தவர்களில் மன்தீப் சிங் 29 (21) ரன்கள் எடுத்தார். மற்ற வர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும், ரபாடா, லமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் தவான் 30 (25), ஸ்ரேயாஸ் ஐயர் 28 (22), ரிஷாப் பன்ட் 39 (26), இங்ரம் 38 (29) ரன் எடுத்தனர். 8 ரன்னுக்குள் கடைசி 7 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. சாம் குர்ரன், ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். சாம் குர்ரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com