ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஸ்ரீகாந்த் விலகியுள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் காயம் காரணமாக ஏற்கனவே சீன ஓபன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் காயத்திலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டார். எனினும் அவர் ஹாங்காங் ஓபன் போட்டியில் அவர் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார். அந்தப் போட்டி அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.
துபாயில் டிசம்பர் மாதம் 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ள உலக சூப்பர் சீரிஸ் போட்டிக்கு தயாராக வேண்டியிருப்பதால், ஹாங்காங் ஓபனை ஸ்ரீகாந்த் தவிர்த்துள்ளார்.