சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி வாகை சூடி சாம்பியனான கேரள அணி!

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி வாகை சூடி சாம்பியனான கேரள அணி!
சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி வாகை சூடி சாம்பியனான கேரள அணி!

கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற சந்தோஷ்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பலம வாய்ந்த பெங்கால் அணியை வீழ்த்தி கேரள அணி சந்தோஷ் கோப்பையை கைப்பற்றியது.

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் பெங்கால் அணியும், இரண்டாவது பாதியில் கேரளாவும் ஆதிக்கம் செலுத்தின.

இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று இறுதிப்போட்டி நடந்தது. ஆட்ட நேர இறுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தன. அதன் பின்னர் பெனால்டி ஷூடவுட்டில் கேரளா 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7வது முறையாக சந்தோஷ் கோப்பையை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com