இந்தியாவில் முதல் விக்கெட்... அதுவும் சென்னையில் வீழ்த்திய பும்ரா!

இந்தியாவில் முதல் விக்கெட்... அதுவும் சென்னையில் வீழ்த்திய பும்ரா!
இந்தியாவில் முதல் விக்கெட்... அதுவும் சென்னையில் வீழ்த்திய பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சென்னையில் தன்னுடைய சொந்த நாட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 79 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்தியாவில் அவர் இதுவரை 1 விக்கெட்டை கூட எடுக்கவில்லை. அந்தக் குறையை பும்ரா சென்னையில் தீர்த்துவிட்டார். இங்கிலாந்து வீரர் லாரண்சை அவுட் செய்து சொந்த மண்ணில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

முன்னதாக இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லே களமிறங்கினர். இந்திய வேகப்பந்துவீச்சை திறம்பட விளையாடி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தனர். இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தும் விளையாடி வந்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரோரி பர்ன்ஸ்.

இதனையடுத்து லாரண்ஸ் களமிறங்கினார். அப்போது பும்ரா பந்துவீச 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார். இப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com