முதுகில் காயம்: சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா!

முதுகில் காயம்: சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா!

முதுகில் காயம்: சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா!
Published on

முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துக்கான சிகிச்சைக்காக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து செல்ல இருக்கிறார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், “ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்க மாட்டார். பும்ரா, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் காயம் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார். அத்துடன் பிசிசிஐயின் மருத்துவக் குழு பும்ராவின் காயத்தை கண்காணிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவருடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்ல இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com