டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை காண 10 ஆயிரம் பேருக்கு அனுமதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை காண 10 ஆயிரம் பேருக்கு அனுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை காண 10 ஆயிரம் பேருக்கு அனுமதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை காண 10 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக டோக்கியோ நகர் ஜோராக தயாராகி வருகிறது. கொரோனா பரவல் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழு வெளியிட்டுல்ள செய்திக் குறிப்பில் "கொரோனா சூழலை கருத்தில் கொண்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் 10,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முறையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட பின்பே மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மைதானங்களிலும் மருத்துவ குழுக்களும் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "ஒருவேளை கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால், பார்வையாளர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்படும். ஆனால் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்" என அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com