ஐஎஸ்எல் கால்பந்து: புள்ளி பட்டியலில் சென்னை முதலிடம்

ஐஎஸ்எல் கால்பந்து: புள்ளி பட்டியலில் சென்னை முதலிடம்
ஐஎஸ்எல் கால்பந்து: புள்ளி பட்டியலில் சென்னை முதலிடம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது. ஜாம்ஷெட்பூரில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜேஜே கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். இதன்பின் இரு அணி வீரர்களும் எடுத்த கோல் முயற்சி வீணாகின. இந்தப்போட்டியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 16 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாம்ஷெட்பூர் அணி பயிற்சியாளர், “இந்திய சூப்பர் லீக்கில் எங்கள் அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. நாங்கள் பெனால்டி வாய்ப்பை இழந்துவிட்டோம். இரண்டாவது பாதியில் கடுமையாக போராடினோம். ஆனால் ஆடுகளம் மோசமானதாக இருந்தது. வீரர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. பந்து அளவுக்கு அதிகமான எகிறியது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com