வில்லியர்ஸ் விக்கெட்: புவனேஷ்வர்குமார் மகிழ்ச்சி!

வில்லியர்ஸ் விக்கெட்: புவனேஷ்வர்குமார் மகிழ்ச்சி!

வில்லியர்ஸ் விக்கெட்: புவனேஷ்வர்குமார் மகிழ்ச்சி!

உலகின் சிறந்த பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ’இந்த போட்டியை அருமையாகத் தொடங்கினோம். இதுபோன்ற ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியை விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அதிகமாக பந்து ஸ்விங் ஆகாது. இருந்தாலும் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினேன். அவர்கள் 25, 30 ரன்கள் அதிகமாக எடுத்துவிட்டார்கள்.  டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவர் எங்கள் பந்துவீச்சை பதம் பார்த்தது வருத்தமாக இருந்தது. அவரது விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி. இருந்தாலும் அவர்களும் சிறப்பாக பந்துவீசி இந்திய வீரர்களின் விக்கெட்டை சாய்த்துள்ளனர்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com