‘கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்திலும் நாங்கதான்’ - சென்னை அணி மீண்டும் சாம்பியன்

‘கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்திலும் நாங்கதான்’ - சென்னை அணி மீண்டும் சாம்பியன்
‘கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்திலும் நாங்கதான்’ - சென்னை அணி மீண்டும் சாம்பியன்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில், பெங்களூரு எஃப்.சி அணியை சென்னை எஃப்.சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 

போட்டி தொடங்கிய 12வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். 20வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் கோல் அடிக்க சமநிலையை எட்டியது. 48வது நிமிடத்தில் மைல்சன் ஆல்வ்ஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் பெங்களூரு அணி தலா ஒரு கோல் அடித்தது. இதனால் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், முதல் அணியாக இரண்டாவது முறை சென்னை எஃப்சி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல் கால்பந்திலும் சென்னை அணி சாம்பியன் என பலரும் குஷியாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com