‘ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட்’ - மும்பை அணி முதலில் பந்துவீச்சு

‘ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட்’ - மும்பை அணி முதலில் பந்துவீச்சு

‘ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட்’ - மும்பை அணி முதலில் பந்துவீச்சு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

மும்பை இண்டியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக உள்ளூர் வீரர் சித்தேஷ் லேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்படுகிறார். இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக சரியாக விளையாடாத நிலையில், அவர் அணியில் இடம்பெறவில்லை.

பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் காயம் காரணமாக அணிக்கு திரும்பவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், முஜிப் ரஹ்மானுக்கு பதிலாக விஜியோன் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி 5இல் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள மும்பை அணி மூன்றாவது வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. பஞ்சாப் அணி கடைசியாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com