ரோகித், டி காக் அடுத்தடுத்து அவுட் : மிரட்டும் சிஎஸ்கே

ரோகித், டி காக் அடுத்தடுத்து அவுட் : மிரட்டும் சிஎஸ்கே
ரோகித், டி காக் அடுத்தடுத்து அவுட் : மிரட்டும் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வரும் நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்ததால், மும்பை முதல் பேட்டிங் செய்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் குயிண்டான் டி காக் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

10 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் ஷர்மா பியூஸ் சாவ்லா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. அவரைத் தொடர்ந்து குயிண்டான் டி காக் 33 (20) ரன்களில் சாம் குரான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com