'இப்போது இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர்' - எச்சரிக்கை விடுக்கும் வீரர்

'இப்போது இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர்' - எச்சரிக்கை விடுக்கும் வீரர்
'இப்போது இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர்' - எச்சரிக்கை விடுக்கும் வீரர்

ஐபிஎல்லில் கேப்டன் பொறுப்புச் சுமை இல்லாத விராட் கோலி எதிரணிக்கு அபாயகரமானவர் என கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. கடந்த சீசன் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்து ஃபார்மெட்களிலும் கேப்டன் பொறுப்பை துறந்த நிலையில் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து ஆர்சிபி அணியின் கிளென் மேக்ஸ்வெல் கூறுகையில், "விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் கிடையாது. பெரிய சுமையாக இருந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கிறோம் என அவருக்குத் தெரியும். கேப்டன் பொறுப்பிலிருந்த  அழுத்தத்தை அவர் இறக்கி வைத்திருப்பது எதிரணிகளுக்கு அபாயகரமான செய்தி. அழுத்தங்கள் இல்லாமல் இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று. வெளியிலிருந்து எவ்வித அழுத்தங்களும் இல்லாமல், அடுத்த சில ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை அவர் அனுபவிக்கட்டும்" என்றார்.

இதையும் படிக்க: ”ரோகித் சர்மா குவிக்கும் வெற்றியின் ரகசியம் இதுதான்” - மும்பை அணி பயிற்சியாளர் ஜாகீர் கான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com