டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா - கடந்த ஆண்டை போலவே நடந்த சோகம்

டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா - கடந்த ஆண்டை போலவே நடந்த சோகம்
டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா - கடந்த ஆண்டை போலவே நடந்த சோகம்

பஞ்சாப் அணியுடன் விளையாடவிருந்த நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், தற்போது ஏறக்குறைய முதல் சுற்று சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கொரோனா காரணமாக மும்பை, நவி மும்பை, புனே ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், டெல்லி அணியில், அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது, ரசிகர்கள் மற்றும் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 15-ம் தேதி, அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் என வந்ததால், கடந்த 16-ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் அந்த அணி பங்கேற்றது.

இதையடுத்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக, கடந்த 18-ம் தேதி புனே செல்ல இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில், இரண்டாவது முறையாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ், டெல்லி அணியின் மருத்துவர், அந்த அணியின் சோஷியல் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதில் பாதிப்பு அதிகம் இருந்ததால் மிட்செல் மார்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் என வந்ததால், புனேவிலிருந்து, மும்பை புரோபோர்ன் மைதானத்திற்கு போட்டி மாற்றப்பட்டு இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக அந்த அணி களமிறங்க இருந்தது.

இந்நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிம் சீஃபர்ட்டுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுக்கு அந்த அணி காத்துள்ளது. கடந்த ஆண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரரான டிம் சீஃபர்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு சென்னை மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் டெல்லி அணியின் மற்றொரு வீரரான அன்ரிச் நார்ட்ஜேவும் முழு உடல்தகுதியுடன் இல்லை என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com