டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ப்ளே-ஆப் ஆட்டத்தில் மிரட்டலான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்திருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சென்னை அணி வெற்றிபெற, 11 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய தோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி, ஐபிஎல் அரங்கில் 9வது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.