ஐபிஎல்: இந்தியாவில் இருந்து மாலத்தீவு நோக்கி புறப்படும் ஆஸ்திரேலிய வீரர்கள்!

ஐபிஎல்: இந்தியாவில் இருந்து மாலத்தீவு நோக்கி புறப்படும் ஆஸ்திரேலிய வீரர்கள்!
ஐபிஎல்: இந்தியாவில் இருந்து மாலத்தீவு நோக்கி புறப்படும் ஆஸ்திரேலிய வீரர்கள்!

ஐபிஎல் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் இருந்து மாலத்தீவு நோக்கி புறப்பாடு!

பயோ பபுளில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வரும் மே 15ஆம் தேதி வரை இந்தியாவுடனான வான்வழி போக்குவரத்துக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆஸ்திரேலியா திரும்புவதில் சிக்கல் எழுந்தது. 

இந்த நிலையில் தான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கூட்டாக இணைந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் இருந்து மாலத்தீவு நோக்கி புறப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. 

“வீரர்கள் அனைவரும் பத்திரமாக இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் சில நாட்கள் தங்கி இருப்பார்கள். பின்னர் ஆஸ்திரேலியாவில் தடை நீங்கியதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி மட்டும் தற்போது இந்தியாவில் உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இப்போது அவர் சிகிச்சையில் உள்ளார். அவரை சென்னை அணி நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது” என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com