சென்னை சுழலில் சுருண்ட பெங்களூர் வீரர்கள் - அசத்திய ஹர்பஜன் சிங்

சென்னை சுழலில் சுருண்ட பெங்களூர் வீரர்கள் - அசத்திய ஹர்பஜன் சிங்

சென்னை சுழலில் சுருண்ட பெங்களூர் வீரர்கள் - அசத்திய ஹர்பஜன் சிங்
Published on

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சுழற்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சில் பெங்களூர் வீரர்கள் சரிந்தனர்.

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. டிதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞசர்ஸ் பெங்களூரூ அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் மற்றும் ட்வையின் ப்ராவோ உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல பெங்களூரூ அணியில் மோயின் அலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், சிம்ரன் ஹெர்ட்மேயர், காலின் டி க்ராண்ட்ஹோம் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கினர்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணியில் விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சென்னையில் அணியில் இரண்டாவது ஓவரையே ஹர்பஜன் சிங் வீசினார். அசத்தலாக பந்துவீசிய அவர் அடுத்தடுத்து விக்கெட்களை அள்ளினார். கேப்டன் விராட் கோலி 6, ஏபி டிவில்லியர்ஸ் 9, மொயின் அலி 9 என முதல் 3 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்தார். 

அதேபோல், ரன்களை குறைவாக கொடுத்தார். அவரை தொடர்ந்து ஜடேஜாவும் தன் பங்கிற்கு கிராண்ஹோமை ஆட்டமிழக்க செய்தார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிரும் அசத்தலாக பந்துவீசி மூன்று விக்கெட்களை சாய்த்தார். பெங்களூர் அணி 59 ரன்னிற்குள் 9 விக்கெட்களை இழந்துவிட்டது. அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 14 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com