ஏப். 7-ல் தொடங்குகிறது ஐபிஎல்: போட்டி நேரங்கள் மாற்றம்

ஏப். 7-ல் தொடங்குகிறது ஐபிஎல்: போட்டி நேரங்கள் மாற்றம்

ஏப். 7-ல் தொடங்குகிறது ஐபிஎல்: போட்டி நேரங்கள் மாற்றம்
Published on

2018 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினோராவது ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான வீரர்களின் ஏலம் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது.  ஏலத்திற்கு மொத்தம் 1,122 வீரர்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 578 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இவர்களில் 360 இந்தியர்களும் அடங்குவர்.

இந்நிலையில், ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27 வரை 2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. தொடக்க விழாவும், முதல் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், இறுதிப் போட்டியும் மும்பையில் நடைபெறவுள்ளது.

முக்கிய அறிவிப்பாக, 8 மணிக்கு தொடங்கும் போட்டிகள் இனி 7 மணிக்கு தொடங்கும் என்றும் 4 மணிக்கு தொடங்கும் போட்டிகள் இனி 5.30 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com