இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டிக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் புதிய சீருடையுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.இந்த புதிய சீருடையை நைக் நிறுவனம் தயாரித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஜெர்சியை, கடுமையான வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தயாரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புது ஜெர்சியுடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உள்ள புகைப்படத்தை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் இந்திய அணி வீரர்கள் தோனி, விராட்கோலி, அஸ்வின், ரஹானே மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீட், மிதாலி ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.