சர்வதேச ஆணழகன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெகதீஷ் லாட், கொரோனா பாதிப்பால் மும்பையில் காலமானார்.
34 வயதான அவர் குடும்பத்துடன் பரோடா பகுதியில் வசித்து வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் தங்கப் பதக்கமும், சர்வதேச ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர்.