கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு

கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு
கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பன் கபில்தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com