'பிங்க் பால் டெஸ்ட்' - இந்திய அணி முதலில் பேட்டிங்; அக்ஸர் படேல் 'இன்'

'பிங்க் பால் டெஸ்ட்' - இந்திய அணி முதலில் பேட்டிங்; அக்ஸர் படேல் 'இன்'
'பிங்க் பால் டெஸ்ட்' - இந்திய அணி முதலில் பேட்டிங்; அக்ஸர் படேல் 'இன்'

பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இலங்கையை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்கிறது. பெங்களூரில் பகலிரவாக பிங்க் நிற பந்தில் இந்தப் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி இப்போது வரை 12 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ரன் அவுட்டானார்.

இந்திய அணி: மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல், முகமது சமி, பும்ரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com