வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விலகல்
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. அதேபோல ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார். இவருக்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் சரியாகததால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.

இந்தச் சூழலில் காயம் குணமாகாததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார். இவருக்கு பதில் இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com