இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்கு
Published on

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 15 ரன்னிற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. இருப்பினரும், தரங்காவும், சமரவிக்ரமாவும் நிலைத்து நின்று விளையாடினர். இதில் தரங்கா சிக்ஸர்களும், பவுண்டரிகளாக விளாசி ரன்களை குவித்தார். 36 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 17 ஓவர்களில் இலங்கை அணி 100 ரன்களை எட்டியது. சமரவிக்ரமா 42 ரன்களில் அவுட் ஆக, அதிரடியாக விளையாடி வந்த தரங்கா 95 ரன்னில் ஸ்டம்பிங்க் ஆனார்.

இதனையடுத்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது. 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 215 ரன்கள் எடுத்தது. 160 ரன்களில் 3 ரன்களை விழுந்த இலங்கை அணி அடுத்த 55 ரன்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடக்க வீரர் தனுஷ்கா 13, மேதிவ்ஸ் 17, அசீலா 17 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி இலங்கைக்கு நெருக்கடியை கொடுத்த ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இதையடுத்து 216 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com