இலங்கை அணியை டி20ல் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
மூன்றாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில்
நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங்
செய்தது. இலங்கை அணி 18 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குனரத்னே 36, சமரவிக்ரமா 21 ரன்கள்
எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு
135 ரன்கள் எடுத்தது. ஷானகா 29, தனஞ்ஜெயா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். உனத்காட், பாண்ட்யா தலா இரண்டு
விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் டி20 போட்டியில் களமிறங்கிய வாஷிங்டர் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ரோகித் சர்மா 27(20), எஸ்எஸ் அய்யர் 30(32), மணிஷ் பாண்டே 32(29) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ்
கார்த்திக் 18(12), தோனி 16(10) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணிக்கு எதிரான
டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 மற்றும் ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில்
இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.