இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட விஹாரி, ஜடேஜா

இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட விஹாரி, ஜடேஜா
இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட விஹாரி, ஜடேஜா

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 240 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளிலும் அனைத்து போட்டிகளிலுமே கடுமையாக மோதிக்கொண்டன. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா வென்றது. ஒருநாள் தொடரில் இங்கிலாந்து வென்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் கோப்பையையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் பட்ளர் 89 (133), குக் 71 (190), மொயின் 50 (170) ரன்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிலைத்து விளையாடிய கேப்டன் கோலியும் 49 ரன்களில் அரைசதம் அடிக்காமல் அவுட் ஆகினார். 

160 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டை இழக்க, 200 ரன்களுக்குள் இந்தியா சுருண்டு விடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து ஜோடி சேர்ந்த விஹாரி மற்றும் ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஹாரி அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்நிலையில் விஹாரி 56 (124) ரன்களில் அவுட் ஆனார். தற்போது ஜடேஜா 41 (94) மற்றும் இஷாந்த் ஷர்மா 1 (10) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 79 ஓவர்களில் 240 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com