2வது டெஸ்ட் தொடக்கத்திலேயே தடுமாறிய இந்தியா : இடைமறித்த மழை

2வது டெஸ்ட் தொடக்கத்திலேயே தடுமாறிய இந்தியா : இடைமறித்த மழை
2வது டெஸ்ட் தொடக்கத்திலேயே தடுமாறிய இந்தியா : இடைமறித்த மழை

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரில் இந்தியா-இங்கிலாந்து விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

2வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற உறுதியில் இரண்டு அணிகளும் இருந்தன. ஆனால் டாஸ் போடுவதற்கு முன்னரே அங்கு மழை சக்கபோடு போட்டதால், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 2ஆம் நாள் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்களான முரளி விஜய் 0 (5), லோகேஷ் ராகுல் 8 (14), புஜாரா 1 (25) ரன்களில் அவுட் ஆகினர். தற்போது கேப்டன் கோலி களத்தில் இருக்கிறார். ஆனால் அதற்கு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 15/3 என உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com