அதிரடி காட்டிய கோலி - ஹாட்ரிக் சிக்ஸருடன் அரை சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அதிரடி காட்ட, மற்றொரு வீரரான ஷிகர் தாவன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 (24) ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுக்க, 47 (26) ரன்களில் ராகுல் வெளியேறினார். இதன்பின்னர் வந்த கோலி அதிரடி காட்ட, ஒரு ரன் மட்டுமே எடுத்து ரிஷாப் பண்ட் ஏமாற்றம் அளித்துச் சென்றார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கோலி-தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் விராட் கோலி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தினார். அத்துடன் 29 பந்துகளில் அரை சதமும் அடித்தார். தற்போது இந்திய அணி 160 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.