இந்தியா முதல் பேட்டிங் - ரோகித், உமேஷ், மார்கண்டே அணியில் இல்லை

இந்தியா முதல் பேட்டிங் - ரோகித், உமேஷ், மார்கண்டே அணியில் இல்லை
இந்தியா முதல் பேட்டிங் - ரோகித், உமேஷ், மார்கண்டே அணியில் இல்லை

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து தோற்கடித்ததால், இந்தப் போட்டியிலும் அதே யுக்தியை ஆஸ்திரேலிய அணி பின்பற்றுகிறது. ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்தப்போட்டியில் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா, கடந்த போட்டியின் இறுதி ஓவரில் 14 ரன்கள் கொடுத்த உமேஷ் யாதவ் மற்றும் மயாங் மார்கண்டே ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இளம் ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com