இந்தியா-நியூஸிலாந்து போட்டி ரத்து : காத்திருந்து கடுப்பான ரசிகர்கள்

இந்தியா-நியூஸிலாந்து போட்டி ரத்து : காத்திருந்து கடுப்பான ரசிகர்கள்
இந்தியா-நியூஸிலாந்து போட்டி ரத்து : காத்திருந்து கடுப்பான ரசிகர்கள்

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி தாமதம் ஆன நிலையில், மழையால் கைவிடப்பட்டது. 

உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் 75 நிமிடங்கள் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் மழை நின்ற பாடில்லை. இதனால் போட்டி மேலும் தள்ளிப்போனது.

ஆனால் அதன்பின்னரும் மழை தொடர்ந்ததால், மைதானம் விளையாடும் நிலையை இழந்தது. இதனால் போட்டி டாஸ் போடாமலே கைவிடப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். போட்டி கைவிடப்பட்டதால் மைதானத்தில் மட்டுமின்றி, டிவியின் முன் காத்திருந்த ரசிகர்களும் கடுப்பாகினர். இந்த உலகக் கோப்பையில் மழையால் ரத்து செய்யப்படும் 3வது போட்டி இதுவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com