லார்ட்ஸ் டெஸ்டின் 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தார் தீப்தி ஷர்மா

லார்ட்ஸ் டெஸ்டின் 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தார் தீப்தி ஷர்மா
லார்ட்ஸ் டெஸ்டின் 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தார் தீப்தி ஷர்மா

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை மணி அடித்து துவக்கி வைத்தார் இந்தியா கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா. ஆள் ரவுண்டரான அவர் இந்த சிறப்பை பெற்றுள்ளார். 

23 வயதான அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1541 ரன்களையும், 68 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். 

இந்த போட்டியில் மணி அடித்து டெஸ்ட் போட்டியை துவக்கி வைக்கும் இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பரூக் இன்ஜினியர் தொடக்கி வைத்திருந்தார். 

லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கே.எல்.ராகுல் 5 ரன்களிலும், ரோகித் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்த நிலையில், கேப்டன் விராட் கோலி 20 ரன்களில் சாம் கர்ரனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி தற்போது வெறும் 29 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com