இலங்கை வீரர் மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!

இலங்கை வீரர் மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!

இலங்கை வீரர் மலிங்கா வீட்டில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
Published on


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வீட்டில் விருந்து அருந்தி இந்திய வீரர்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். 

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நாளை கொழும்புவில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், இலங்கை அணி வீரர்களுக்கும் லிசித் மலிங்கா தனது வீட்டில் விருந்து அளித்தார். 

இலங்கை அணியின் பொறுப்பு கேப்டனாக லசித் மலிங்கா இருந்து வருகிறார்.  இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள் அப்போது எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இலங்கை வீரரான மலிங்கா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி உள்ள அவர், இந்திய அணி வீரர்கள் பலருடன் நட்பை தொடர்ந்து வருகிறார். அவருடன் இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா, பும்ரா, ஹிர்திக் பாண்ட்யா, ரஹானே ஆகியோர் நட்பை தொடர்ந்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com