கோவாவில் 2020-21 சீசனுக்கான ஐ.எஸ்.எல் போட்டி நடைபெறும் என அறிவிப்பு

கோவாவில் 2020-21 சீசனுக்கான ஐ.எஸ்.எல் போட்டி நடைபெறும் என அறிவிப்பு
கோவாவில் 2020-21 சீசனுக்கான ஐ.எஸ்.எல் போட்டி நடைபெறும் என அறிவிப்பு

2020-21 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் வரும் நவம்பர் முதல் கோவாவில் நடைபெற உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலினால் ரசிகர்களின் வருகை இல்லாமல் மைதானங்களின் கதவுகள் அடைக்கப்பட்டு ஏழாவது ஐ.எஸ்.எல் தொடர் கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் விளையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐ.எஸ்.எல் தொடரின் ஏழாவது சீசன் கோவா மாநிலத்திற்கு கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சீசன்களில் நாங்கள் இதை செய்யாமல் போய்விட்டோம். இதன் மூலம் கோவா மீண்டும் கால்பந்தாட்ட விளையாட்டின் மையமாக மாறியுள்ளது. 

கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.எஸ்.எல் தொடர் மூலம் இந்தியா சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் தனி கவனம் பெற்று வருகிறது” என ஐ.எஸ்.எல் போட்டிகளை நிர்வகிக்கும் குழுவின் தலைவர் நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com