உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்-2021 தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். முதல் முறையாக இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குள் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நுழைந்துள்ள இந்திய வீரர் (Men) என்ற சாதனையை படைத்துள்ளார் அவர். இந்தத் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. 

அரையிறுதியில் மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென்-னை 17-21, 21-14, 21-17 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த வீர Loh Kean Yew-யுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்கிறார் கிடாம்பி. 

கடந்த வெள்ளி அன்று காலிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்திருந்தார் கிடாம்பி. இறுதிப் போட்டியில் வென்றால் தங்கப்பதக்கம் அவர் வெல்வது உறுதியாகும். 1977 முதல் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா ஒரே ஒரு தங்கம் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2019-இல் நடைபெற்ற தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com