உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) நடத்தும் 2021 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். காலிறுதியில் நெதர்லாந்து வீரர் Mark Caljouw-வை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் கிடாம்பி. 

காலிறுதியில் 21 - 8, 21 -7 என்ற நேர் செட் கணக்கில் மார்க்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் அவர். இதன் மூலம் முதல்முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரங்கில் பதக்க மேடையை ஏற உள்ளார் அவர். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், சீன வீரரை முதல் செட்டில் வென்றுள்ளார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து, தைவான் நாட்டை சேர்ந்த தை சூ-விடம் 17 - 21, 13 - 21 என நேர் செட் கணக்கில் ஆட்டத்தை இழந்து தொடரைவிட்டு வெளியேறி உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com