பிர்மிங்க்ஹாமில் மழை: அப்ப இந்தியா- பாக். மேட்ச்?

பிர்மிங்க்ஹாமில் மழை: அப்ப இந்தியா- பாக். மேட்ச்?
பிர்மிங்க்ஹாமில் மழை: அப்ப இந்தியா- பாக். மேட்ச்?

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்தின் பிர்மிங்க்ஹாமில் அடிக்கடி மழை பெய்துவருவதால் இந்த போட்டி, தடை பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இரண்டு வருடத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறது இந்திய அணி. கடைசியாக 2015-ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது இந்திய அணி. இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் போட்டி நடைபெறும் இங்கிலாந்தின் பிர்மிங்க்ஹாமில் அடிக்கடி மழை பெய்துவருகிறது. இன்று காலையும் மழை பெய்தது. மாலையிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com