5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் - தென்னாப்ரிக்காவை கட்டுப்படுத்தும் இந்தியா

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் - தென்னாப்ரிக்காவை கட்டுப்படுத்தும் இந்தியா
5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் - தென்னாப்ரிக்காவை கட்டுப்படுத்தும் இந்தியா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த ரன்களை தென்னாப்பிரிக்க அணி டிரையல் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்ஸில் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். எல்கர், பீட்டர்சன், ராசி வான்டர் டூசன், Kyle Verreynne, பவுமா என ஐந்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை தாக்கூர் கைப்பற்றி உள்ளார்.

முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றி அசத்தியுள்ளார் தாக்கூர். இதன் மூலம் ஆட்டமும் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது வந்துள்ளது. இந்திய அணியின் மற்ற பவுலர்களில் ஷமியை தவிர யாரும் விக்கெட்டை இந்த இன்னிங்ஸில் கைப்பற்றவில்லை. ஷமி இரண்டு விக்கெட் வீழ்த்தியுள்ளார். தென்னாப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com