கோலியை TROLL செய்யும் ட்வீட்: முதலில் லைக் செய்து, பின்னர் அன்லைக் செய்த சூரியகுமார் யாதவ்

கோலியை TROLL செய்யும் ட்வீட்: முதலில் லைக் செய்து, பின்னர் அன்லைக் செய்த சூரியகுமார் யாதவ்
கோலியை TROLL செய்யும் ட்வீட்: முதலில் லைக் செய்து, பின்னர் அன்லைக் செய்த சூரியகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை TROLL செய்து பரவிய ட்வீட்டை முதலில் லைக் செய்து, பின்னர் அன் லைக் செய்தார் சூரியகுமார் யாதவ்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு இடம் பிடித்துள்ளார் சூரியகுமார் யாதவ். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசத்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் இந்திய கேப்டன் கோலியை TROLL செய்து பகிரப்பட்ட ட்வீட் ஒன்றுக்கு முதலில் லைக் போட்டுள்ளார் சூரியகுமார் யாதவ். 

தற்போது அந்த ட்வீட்டுக்கு போட்ட லைக்கை டிஸ் லைக் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ரோகித் ஷர்மாவை புகழ்ந்தும், கோலியை இகழ்ந்தும் மீம் போடப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டை தான் சூரியகுமார் யாதவ் லைக் செய்தும், பின்னர் டிஸ் லைக்கும் செய்திருந்தார். சூரிய குமார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ரோகித்தும், சூரியகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com