வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தத் தொடரில் பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் 104 ரன்கள், பண்ட் 85 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 80 ரன்கள், ரோகித் 78 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 57 ரன்கள், தீபக் ஹூடா 55 ரன்கள், கே.எல்.ராகுல் 49 ரன்கள் எடுத்திருந்தனர். இதில் ஹூடா இரண்டு போட்டிகளும், ஷ்ரேயஸ் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தனர். 

பவுலிங்கில் இந்திய அணிக்காக பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 27.1 ஓவர்கள் இந்த தொடரில் அவர் வீசியுள்ளார். இந்திய அணிக்கு கேம் சேஞ்சராக ஜொலித்தவர் அவர். அவருக்கு பிளேயர் ஆப் தி சீரிஸ் விருது கொடுக்கப்பட்டது. 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் பதிவு செய்த ஷ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அடுத்ததாக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த தொடர் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com