“ஆண்டர்சனை லேசாக எண்ணிவிட வேண்டாம்”- ஆகாஷ் சோப்ரா கொடுத்த அட்வைஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனை லேசாக எண்ணிவிட வேண்டாம் என இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
“இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் முன்புபோல அசத்தலான பார்மில் இல்லை தான். இருந்தாலும் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற சூட்சமத்தை அறிந்தவர் அவர். அவரது சீமை கூர்ந்து கவனித்து பிராண்ட் ஃபூட்டில் ஆட வேண்டும். ஆண்டர்சன் பந்துவீசும்போது கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடினால் அவரது ரிதமை நம்மால் டிஸ்டர்ப் செய்ய முடியும்.
அவர் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வயதே ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது. 40 வயதை நெருங்கியிருந்தாலும் அவர் களைப்பில்லாமல் தான் விளையாடுகிறார். இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்” என சொல்லியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.