3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!

3-வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!
3-வது டி20 கிரிக்கெட்:  வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது இருவது ஓவர் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்தபோது தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 76 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். எனினும் ரிஷப் பந்த், தீபக் ஹூடா கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com