3ஆவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்! இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா?

3ஆவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்! இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா?
3ஆவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்! இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா?

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், சம்பிரதாய போட்டியாக இது நடைபெறுகிறது.



இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்ற இந்திய அணி வரிந்துகட்டுகிறது. அதே சமயம், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஆறுதல் வெற்றியுடன் இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.

போட்டிக்கு முன்னதாக பேசியிருந்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நாங்கள் தொடரை வென்றிருந்தாலும் இந்திய அணியில் பவுலிங்க் மற்றும் பேட்டிங்கில் இருக்கும் சில டார்க்கான இடங்களை, நாங்கள் இன்னும் மெருகேற்ற வேண்டிய இடத்தில் உள்ளோம் என்று தெரிவித்திருந்தார். மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி அதில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com