’ரோகித் டூ ஜடேஜா’ - சீட்டு கட்டு போல் சரிந்த வீரர்கள்.. அதிரடியால் அணியை மீட்ட ஸ்ரேயாஸ்!

’ரோகித் டூ ஜடேஜா’ - சீட்டு கட்டு போல் சரிந்த வீரர்கள்.. அதிரடியால் அணியை மீட்ட ஸ்ரேயாஸ்!

’ரோகித் டூ ஜடேஜா’ - சீட்டு கட்டு போல் சரிந்த வீரர்கள்.. அதிரடியால் அணியை மீட்ட ஸ்ரேயாஸ்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சொற்ப ரள்கனில் ஆட்டமிழந்து தடுமாறிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து கவுரமான ஸ்கோர் எட்ட உதவினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டி20 தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில், பகலிரவு போட்டியாக இன்று துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் (4) மற்றும் ரோகித் சர்மா(15) இருவரும் அவுட்டாகினர். தொடர்ந்து ஹனுமா விகாரியும் விராட் கோலியும் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹனுமா விகாரி 31 ரன்கள் எடுத்த நிலையில், ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

101-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி, இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 23 ரன்களில் தனஞ்ஜெயா டி சில்வா பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 29 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயஸ் அய்யரும் ஒரு ரன்களுடனும், ரிஷப் பந்த் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் தேநீர் இடைவெளிக்குப் பின்னர் விளையாடிய இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பந்த் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜடேஜா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அஸ்வின் 13 ரன்களுக்கு அவுட்டாக, ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஆளாக போராடி அரைசதம் அடித்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் அவர் தனது அதிரடியை நிறுத்தவில்லை.

59.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 25 ரன்கள் எடுத்தது. இறுதிவரை போராடிய ஸ்ரேயாஸ் 98 பந்துகள் 92 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இலங்கை அணி தரப்பில் பிரவீன் ஜெயவிக்ரமா, லசித் எம்புல்தினியா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வந்த நிலையில், தனி ஒருவனாக போராடி அணிக்கு கவுரமான ஸ்கோர் எட்ட உதவினார் ஸ்ரேயாஸ்.

முன்னதாக,கேப்டன் விராத் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com