ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இந்தியா - தென்னாப்ரிக்கா போட்டி

ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இந்தியா - தென்னாப்ரிக்கா போட்டி
ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது இந்தியா - தென்னாப்ரிக்கா போட்டி

இந்தியா - தென்னாப்ரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது‌. பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், தர்மசாலாவில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் கூட போடப்படவில்லை.

மழை காரணமாக தாமதமானதால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும் என்று முதலில் கருதப்பட்டது. அதாவது, 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், மழை தொடர்ந்ததால், மைதானம் ஈரப்பதமாகவே காணப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கபட்டது. கொரோனா தொற்று காரணமாக மைதானத்தில் ரசிகர்களின் வருகை குறைவா‌க காணப்பட்டது‌‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com