“டி காக்” அதிரடி பேட்டிங் - இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

“டி காக்” அதிரடி பேட்டிங் - இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

“டி காக்” அதிரடி பேட்டிங் - இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
Published on

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் அதிரடியாக விளையாட, ரோகித் ஷர்மா 9 (8) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலியும் 9 (15) ரன்களில் வெளியேற, 36 (25) ரன்களில் தவானும் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களான ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் குயிண்டான் டி காக் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 28 (26) ரன்களில் ஹெண்ட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் பாவுமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டினர். 

அதிரடியாக விளையாடிய டி காக் 52 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். பாவுமா 27 (23) ரன்கள் எடுத்தார். 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி இலக்கை எளிதில் எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com