மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..!

மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..!
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெற நிதானமாக ஆடும் இந்தியா..!

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று 2க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தற்போது 16 ஓவர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால், விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிருத்வி ஷா 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் உள்ளனர்.

ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றிப்பெற இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில் டி20 தொடரின் தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இந்தியாவை WHITE WASH செய்ய நியூசிலாந்தும் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com